" alt="" aria-hidden="true" />
தேனி மாவட்டம் பகுதியில் தொடர்ந்து மாலை முதல் இரவு வரை கனமழை பெய்து வருகிறதுஇதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம், தேனி ,வடுகபட்டி, இலட்சுமிபுரம், ஆண்டிபட்டி, கம்பம் போன்ற பகுதிகளில் மாலை 6 மணிக்கு பெய்த மழை தொடர்ந்து இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தன. மாவட்டத்தில் தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ள சூழ்நிலையில் இந்த மழை பெய்தது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது
மேலும் விவசாயிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இப்போது பெய்த மழையினால் வைகை அணை மற்றும் சோத்துப்பாறை அணை கும்பக்கரை நீர்வீழ்ச்சி பகுதிகளில் நீர் வருவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன என்று அனைவராலும் சொல்லப்படுகின்றன.
அப்படி நீர்வரத்து வந்தால் விவசாயத்திற்கு அதிகளவில் பயன் அடையும் என்று விவசாயிகளும் பொதுமக்களும் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.